Tuesday, 17 August 2010

வாழ்க வளமுடன்!

கடமையைசெய்.பலன் தானாக வரும் என்று அறிவியல் ரீதியாக விளக்கி வழிகாட்டியவர் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.


Friday, 6 August 2010

அருள்தந்தை அவர்களின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா


Swamiji Special Stamp Release Function Invitation


அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நாள்                          :  14.08.2010 சனிக்கிழமை
நேரம்                        :  காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம்                         :  ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.

நிகழ்ச்சி நிரல்
காலை  
10.30 மணி                : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்

வரவேற்புரை             : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.

முன்னிலையுரை        : பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

விருந்தினர்களை கௌரவித்தல் 

விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும் 
ஆசிகளும் வழங்குதல்  : மாண்புமிகு தமிழக முதல்வர்  டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்

சிறப்பு அஞ்சல் தலையை
 வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.

விழா மலரைப் பெற்றுக்
கொள்பவர்                    : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
 நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

நன்றியுரை                    : அருள்நிதி கே.ஆர். நாகராஜன் அவர்கள்
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Saturday, 29 May 2010

பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் சென்னையில் பிறந்தவரா?குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் நிச்சயம் தேவைப்படும்.அதற்காக மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி  வீட்டிலிருந்தபடியே பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மனு செய்து முன்பு போல காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் முக்கிய மற்றும் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி! கீழ்காணும் LINK ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் .
www.chennaicorporation.gov.in

Friday, 14 May 2010

நியாயத்திற்கு கிடைத்த வெற்றி! முதல்வருக்கு நன்றி !

நான்காண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நியாயத்திற்கு கிடைத்த வெற்றி!ÚLÖ«¥ ŒX†‡Á YÖPÛL ,அரசு உத்தரவு!அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!

ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£ப்ÚTÖ¡Á ‰ÁT†ÛR† ‰ÛP†‰, AYŸLÛ[ TÖ‰LÖ†‡|• YÛL›¥, ÙNVXŸ, BÛQVŸ U¼¿• GÁÛ]யும் LX‹‰ BÚXÖp†‰ 9.11.2007-¥ வழங்கப்பட்ட N¨ÛLLÛ[ ÚU¨• «¡°T|†‡ E†RW° ‘\ப்‘eLXÖ• G] A½°ÛWL· வழங்கியு·[ÖŸL·. CRÁTz, 2007-• ஆண்டு AWNÖÛQ›¥ ŒŸQ›eLTyP “‡V YÖPÛLÛV 2001-• ஆண்டி¦£‹ÚR Œ¨வையு PÁ Ys¦eLTP வேண்டும் GÁ\ E†RW«Û] R[Ÿ° ÙNš‰, ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£TYŸL· 2001-• ஆண்டி¦£‹‰ 2007-• ஆண்டு YÛW ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh H¼L]ÚY RÖjL· GÁ] YÖPÛL ÙN¨†‡ Y‹RÖŸLÚ[Ö A‹R TÛZV YÖPÛLÛVÚV ÙN¨†‡]Ö¥ ÚTÖ‰• GÁ¿•, 2007-• ஆண்டு ˜R¥, 9.11.2007 SÖ¸yP AWNÖÛQ›ÁTz ŒŸQ›eLTyP “‡V YÖPÛL›Û] ÙN¨†‡P வேண்டுÙUÁ¿• A½°ÛW YZjf, CÁ¿ C‹R A½விப்‘Û] ÙR¡«eL ˜R¥-AÛUoNŸ E†RW«y| E·[ÖŸ. CRÁ ™X• R–ZL• ˜µY‰• E·[ ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£• T¥XÖ›WeLQeLÖ] h|•TjL·, AYŸL· G‡ŸTÖŸ†‡£‹R TVÛ] AÛPYÖŸL·.

நான்காண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நியாயத்திற்கு கிடைத்த வெற்றி!
 முதல்வருக்கு  நன்றி !

நன்றி- செய்தி :தினத்தந்தி

Monday, 10 May 2010

கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல

கோயில் நிலங்களில் குடியிருந்து வருவோரில் 99 % சதவீதம் பேர் ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசு தன்னிச்சையாக ஒரு சட்டத்தை இயற்றியது.அதனை நடைமுறைபடுத்தவில்லை.அதன் பின் வந்த அதி மு க அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை .திரும்பவும் பொறுப்பேற்ற திமுக அரசு வந்த உடனேயே அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த துவங்கியது.
அறநிலையத்துறை வாடகைதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் பல லட்சங்கள் பாக்கி என்று மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கி போட்டது.
எப்படிஎன்றால் சுமார் 60 ரூபாய் வாடகை கட்டுபவருக்கு 4000 ரூபாய் வாடகை நிர்ணயித்து கடந்த ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு நான்கு  லட்சம் ,ஐந்து லட்சம் என வாடகை பாக்கி யாக நிர்ணயித்து குடியிருப்போரை மிரட்டிவருகிறது.
     உண்மையிலேயே அறநிலையத்துறை கோயில் மேம்பாட்டில் அக்கறை கொண்டு இதனை செயல் படுத்துகிறதா?இப்படியாக வரும் வசூலிக்கும் பணத்தை  அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கொள்ளையடிக்க போட்ட திட்டமா?
 தற்போது கோயில்களில் திருப்பணிகள் செய்வது யார்?
விழாக்கள் நடத்துவது யார்?
அனைத்தும் உபயதாரர்கள்தான்.
அதிலும் குறிப்பாக அடிமனைகுடியிருப்போர்தான் .
அப்படியிருக்கும்போது நியாயமான வாடகை நிர்ணயிக்காமல் கந்துவட்டி கும்பலைபோல் நடந்துகொள்வது ஏன்? நியாயமான விலைக்கு பட்டா கொடுத்தால் கூட கோயில்களுக்கு பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அதன்முலம் கோயிலுக்கு வேண்டிய பராமரிப்பு வேலைகளைச் செய்யலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவுசெய்து வீடு கட்டியோர்,பழுதுபார்த்தோர் இப்படி ஒரு நிலைமை வருமென்று தெரிந்திருந்தால் அந்தக் காசை புறநகர் பகுதியில் இடம் வாங்கிப் போட்டிருந்தால் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பாகியிருக்கலாம்.
கோயில் நிலம் தானே,அறுபது நூறு வருடங்கள் இங்கே வாழ்ந்தாயிற்று இனிமேல் எங்கே செல்வது? என்று யோசனை செய்தவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையா?
தமிழக அரசே! அறநிலையத்துறையை கலைத்துவிடு.நாங்கள் கோயில்களை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்.
கோயில் நிலமென்பது கடவுளே  கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல.நம்மைபோன்ற மக்கள் வாரிசு இல்லாதோர் கொடுத்த நிலம் தான்.
சொந்த மண்ணில்  மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !அதன் பிறகு பக்கத்து நாட்டு  மக்களை வாழவைக்கலாம்!

Wednesday, 7 April 2010

6000 வது இன்னிசை நிகழ்ச்சி

ஸ்ரீதர் நவராக்ஸ் அவர்களின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி  08-04-2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும்  "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, 6 April 2010

"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை


அன்பு வாசகர்களே!தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த ஒரு தமிழர் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் .அதாவது 1975 ல் ஆரம்பித்து இதுவரை 5999 தமிழ் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.அவர் யார் தெரியுமா? எம் எஸ் வி- ராமமூர்த்தி முதற்கொண்டு இன்றைய இசை உலகைச் சேர்ந்த அனைவராலும் நவராக்ஸ் ஸ்ரீதர் என அன்புடன் அழைக்கப் பட்டவர்.
 இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -ராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அவரின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 8 -04 -2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, 3 April 2010

Friday, 2 April 2010

நாட்டிற்க்கு சுயநலவாதிகளால் பெரும் ஆபத்து ?

இன்று
       அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு  வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
  பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே  அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
   அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......

Sunday, 28 March 2010

சென்னை மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா


நன்றி!-தினமலர்
என் கருத்து.....
சென்னை மயிலாப்பூரில் அறுபத்து முவர் திருவிழா அன்பின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி கொள்வது இயற்கை.
 திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
 1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
 2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
    என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.

Friday, 26 March 2010

மயிலாப்பூரில் தேர் திருவிழா!


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விழா நடக்கிறது. 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடையாற்றி விழா நடக்கிறது.
நேற்று 7ம் நாள் விழா நடந்தது. காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின், கபாலீஸ்வரர் தேர் சென்றது.
அதை தொடர்ந்து கற்பகாம்பாள், சிங்கார வேலர், சண்டீஸ்வரர் தேர்கள் அணிவகுந்தன. மேளதாளம் முழங்க தேர் பவனி வந்தது. கற்பகாம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் வலம் வரும் பாதையெங்கும் இலவசமாக மோர், எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டன. கிழக்கு மாட வீதியில் தேர் புறப்பட்டு தெற்கு, மேற்கு மாடவீதி வழியாக கிழக்கு மாட வீதியில் மதியம் 12.45 மணிக்கு நிலைக்கு நின்றது. பின்னர், தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்குள் எழுந்தருளினார். தேரோட்டத்தை காண சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்க இருக்கிறது. இதைக் காண லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இரவு ஐந்திருமேனிகள் விழா நடைபெறும்

Monday, 15 March 2010

மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்'

சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகரட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 'சென்னை மாநகராட்சி பள்ளி' என்ற பெயர் 'சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.




ஒருபக்கம் குழந்தைகள் கல்விபயில அரசின் கண்கவர் திட்டங்கள்.மறுபுறம் அவர்கள் படிப்பதற்கு மரநிழல் கூட இல்லாத நிலை.அரசுக்கு ஏன் இந்த பாரபட்சம் அரசு நினைத்தால் இந்த நிலையை போக்க முடியாதா?
ஆறே மாதத்தில் சட்ட சபையை நிர்மாணித்த அரசுக்கு ,நாட்டின் ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம பள்ளிக் கூடங்களுக்கு ஏன் கட்டடங்கள் கட்டித்தர முடியாது?
(இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.)

Saturday, 13 March 2010

சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்


புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்
புகைப்படம் ,நன்றி :தினமலர்


சென்னை, மார்ச் 13- தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மாலை 5 மணியளவில் அவர் ரிப்பனை கத்தரித்து கட்டடத்தை பிரதமர் திறந்துவைத்தார். பின்னர், முதல்வர் கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பேட்டரி கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் வரவேற்றுப் பேசினார்.முதல்வர் கருணாநிதி விழா தலைமையுரை நிகழ்த்திய பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். முடிவில், தலைமைச் செயலர் திரிபாதி நன்றி கூறினார்.
செய்தி, நன்றி! தினமணி

இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு கோலாகலமாக இருக்க வேண்டிய விழாவை ,சென்னை மக்களே மகிச்சியாக கூடிய சூழலை உருவாக்காமல் இன்று முழுவதும் சென்னையில் தடையுத்தரவு 144 போன்ற சூழலை உருவாக்கி மக்களை நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லல்பட வைத்துள்ளது வருத்தப்படவேண்டிய விஷயம்.இன்னும் சற்று விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Thursday, 11 March 2010

நன்றி!தினமலர்
முதல்வர் கருணாநிதி ஒருபக்கம் நான்தான் நினைவாலயாங்களும் சிலைகளும் எழுப்பினேன் என்கிறார்.
அதற்கு பதிலடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நினைவாலயங்களும் சிலைகளும் உருவாக்கினேன் என்கிறார்.
ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்று முனோர்களை போற்றி பாராட்டுவதன் மூலம் தான் நம்முடைய ஆட்சிப் பணிகள் எப்படி இருந்தன ,இருக்கின்றன என்பதற்கு வருங்கால தலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவும் அடையாளம்.
அப்படி கவனிக்கப் படாத தலைவர்கள் இருட்டடிப்பு செயப்பட்ட தலைவர்கள் என பலர் உண்டு.அவர்கள் செய்த சாதனைகள் பற்றிக் கூறினால் எங்கே அவர்கள் இனம் வளர்ந்துவிடுமோ? என்ற கவலையா?

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு வரவேண்டியிருந்த பல கோடி ரூபாய் அன்னிய செலாவனிப் பணத்தை இந்தியாவுக்கு தனது வாதத்திறமையால் பெற்றுத்தந்தார்.தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்த தமிழிசைச் சஙத்தை தோற்றுவித்தார்.ராஜா அண்ணாமலை மன்றம் உருவாகக் காரணமானவர்.கோவையை தொழில் நகரமாக மாற்றியவர்.இன்னும் அவர் செய்த சேவை எண்ணிலடங்காது.அவருக்கு தமிழக அரசு செய்த மரியாதை என்ன? மத்திய அரசு செய்த மரியாதை என்ன?

Tuesday, 9 March 2010

நாட்டிற்க்கு பேராபத்து காத்திருக்கிறது


தினமணியில் (9-03-2010)செவ்வாயன்று வந்த செய்தியை படித்து இரண்டு நிமிடம் ஒதுக்கி நம் சமுதாயத்தின் நலன் கருதி சிந்திப்போம்.ஏற்கனவே நடுத்தர அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் சில்லறை விற்பனையை அம்பானிகளுக்கும் வெளிநாட்டு பணமுதலைகளுக்கும் ஏலம் விட்டு (சிதம்பரமும் குற்றவாளி) விலைவாசி விஷம் போல ஏறி தினம் தினம் அல்லல்படும் பொதுமக்கள் வேதனை போதாதென்று தற்போது மக்களுடைய உயிரையும் விலைபேசுகிறதா?
கர்சரை படத்தின் மேல் கிளிக் செய்து அதன் பின் படியுங்கள்

Saturday, 6 March 2010

நிவாரணம் வழங்க அரசிடம் பணம் இல்லை : மாயாவதி அறிவிப்பு


லக்னோ : உத்திர பிரதேச மாநிலம் பிரதாப்கர் ஆசிரமத்தில் பணம் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்து போலீஸ் கண்காணிப்பு பகுதிக்கு அருகில் நடந்துள்ளது. சுமார் 15 ஆயிரம் மக்கள் கூடிய இந்நிகழ்ச்சியில், கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற இடத்தை மாயாவதி நேரில் பார்வையிட வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியிடம் கேட்டதற்கு, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு அரசிடம் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் பல நூறு கோடி ரூபாய் செலவில் சிலைகள் அமைத்த மாயாவதி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியின் 25வது ஆண்டு விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

எல்லா ஊர் முதல்வர்களுமே அப்படியா?


Thanks:Dinamalar

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவசப் பயிற்சிகள்

நன்றி!-தினமணி

திருச்சி, மார்ச் 5: பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நிதியுதவியோடு சிறுபான்மையினர் அல்லாத பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு இலவச வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.கார்மெண்ட் தயாரிப்பு தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் வடிவமைப்பு மற்றும் கணினிப் பயன்பாடு, ஷட்டில்லெஸ் விவிங் ஆகிய பயிற்சிகள் ஓராண்டு நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆப்தலாமேஜி உதவியாளர் பயற்சி 6 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஜேசிபி பொக்லைன் போர்க் லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட பயிற்சியில் சேர விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், 2010, ஜனவரி 1 ஆம் தேதியன்று 32 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பயிற்சிக் கட்டணத் தொகை முழுவதும் அரசால் பயிற்சி நிலையத்துக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஒரு வெள்ளைத் தாளில் சேர விரும்பும் பயிற்சியின் பெயர், மாணவ, மாணவியின் பெயர், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தற்போதைய முகவரி (தொலைபேசி எஎண்ணுடன்), பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, ஜாதி மற்றும் ஆண்டு வருமானம் ஆகிய விவரங்களுடன் பூர்த்தி செய்து, கல்வித் தகுதிச் சான்றிதழ் நகல், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூ. 5 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு மார்ச் 8 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பப் படிவங்களை அனுப்பி, பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்றார் அவர்.

Friday, 5 March 2010

திருவல்லிக்கேணியில் விடுதி ஏற்படக்காரணம்

டாக்டர் நடேசனார்

1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த
தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ``திராவிடர் இல்லம்'' என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!

ஏன் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!

1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது
என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை
எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற
வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பறையன்'' என்றே அரசு ரிக்கார்டுகளில்
குறித்து வந்ததை எதிர்த்து ``ஆதிதிராவிடர்''என்றே குறிக்க வேண்டும் என்று
சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை
அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி . நடேசனார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?

இன்று பதவிநியமனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ``பப்ளிக் சர்வீஸ் கமிஷன்'' பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி நீதிக்கட்சித் தலைவர் டாக்டர்
நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் சாலை அவரின் சேவையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
நன்றி!--விமலேந்திரா திருஞானசம்பந்தர்



Wednesday, 3 March 2010

சாமி (யார்?)

சாமி(யார்?) நேற்று வரை உச்சி சாமி இன்று கிச்சு சாமி.
ஆரம்பத்திலிருந்தே இவர்மீது சந்தேகமுண்டு.இவர் மீது மட்டுமல்ல.மேலும் பலர் இந்த வேடமிட்டு பணத்தையும் ,மேலிட செல்வாக்கையும் பெற்று உலவுகிறார்கள்.
கணவனை வீட்டு வேலை செய்யவிட்டு ()சாமிக்கு பாத பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்.
நம்பிக்கை நம்மிடத்தில் வையுங்கள்! நம் குடும்பத்தின் மீது வையுங்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
இல்லையென்றால்()சாமிதான் மகிழ்ச்சியில் இருப்பார்.

Tuesday, 2 March 2010

மாமியாரா? மருமகளா?

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ளது அங்காளபரமேஸ்வரிஅம்மன் கோயில் .அங்கு நடைபெற்ற சிவராத்திரி மயானச் சூறை என்ற மாபெரும் வீதிஉலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு நடைபெறும் உடுக்கை ஒலி சப்தத்தில் பலருக்கும் சாமி வந்தது என்று சொல்வார்களே அதுபோல் வந்தது. உண்மையில் சாமி வந்தவர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுத்து பார்த்ததில்லை.இந்தவருடம் நடைபெற்ற விழாவில் ஒருவருக்கு சாமிவந்ததை பாருங்கள்.
மயானச்சூரையின் போது வெளிப்பட்ட குடும்ப (குடுமிச்) சண்டை.உண்மையில் சாமி வந்தது போல் ஆடி மருமகளை இந்தப்பிடி பிடிக்கிறார்


வீடியோ உதவி: D.வசந்தகுமார்