Thursday, 11 March 2010

நன்றி!தினமலர்
முதல்வர் கருணாநிதி ஒருபக்கம் நான்தான் நினைவாலயாங்களும் சிலைகளும் எழுப்பினேன் என்கிறார்.
அதற்கு பதிலடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நினைவாலயங்களும் சிலைகளும் உருவாக்கினேன் என்கிறார்.
ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்று முனோர்களை போற்றி பாராட்டுவதன் மூலம் தான் நம்முடைய ஆட்சிப் பணிகள் எப்படி இருந்தன ,இருக்கின்றன என்பதற்கு வருங்கால தலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவும் அடையாளம்.
அப்படி கவனிக்கப் படாத தலைவர்கள் இருட்டடிப்பு செயப்பட்ட தலைவர்கள் என பலர் உண்டு.அவர்கள் செய்த சாதனைகள் பற்றிக் கூறினால் எங்கே அவர்கள் இனம் வளர்ந்துவிடுமோ? என்ற கவலையா?

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு வரவேண்டியிருந்த பல கோடி ரூபாய் அன்னிய செலாவனிப் பணத்தை இந்தியாவுக்கு தனது வாதத்திறமையால் பெற்றுத்தந்தார்.தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்த தமிழிசைச் சஙத்தை தோற்றுவித்தார்.ராஜா அண்ணாமலை மன்றம் உருவாகக் காரணமானவர்.கோவையை தொழில் நகரமாக மாற்றியவர்.இன்னும் அவர் செய்த சேவை எண்ணிலடங்காது.அவருக்கு தமிழக அரசு செய்த மரியாதை என்ன? மத்திய அரசு செய்த மரியாதை என்ன?

No comments:

Post a Comment