Saturday, 13 March 2010

சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்


புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்
புகைப்படம் ,நன்றி :தினமலர்


சென்னை, மார்ச் 13- தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மாலை 5 மணியளவில் அவர் ரிப்பனை கத்தரித்து கட்டடத்தை பிரதமர் திறந்துவைத்தார். பின்னர், முதல்வர் கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பேட்டரி கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் வரவேற்றுப் பேசினார்.முதல்வர் கருணாநிதி விழா தலைமையுரை நிகழ்த்திய பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். முடிவில், தலைமைச் செயலர் திரிபாதி நன்றி கூறினார்.
செய்தி, நன்றி! தினமணி

இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு கோலாகலமாக இருக்க வேண்டிய விழாவை ,சென்னை மக்களே மகிச்சியாக கூடிய சூழலை உருவாக்காமல் இன்று முழுவதும் சென்னையில் தடையுத்தரவு 144 போன்ற சூழலை உருவாக்கி மக்களை நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லல்பட வைத்துள்ளது வருத்தப்படவேண்டிய விஷயம்.இன்னும் சற்று விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment