Friday, 5 March 2010

திருவல்லிக்கேணியில் விடுதி ஏற்படக்காரணம்

டாக்டர் நடேசனார்

1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த
தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ``திராவிடர் இல்லம்'' என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!

ஏன் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!

1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது
என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை
எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற
வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பறையன்'' என்றே அரசு ரிக்கார்டுகளில்
குறித்து வந்ததை எதிர்த்து ``ஆதிதிராவிடர்''என்றே குறிக்க வேண்டும் என்று
சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை
அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி . நடேசனார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?

இன்று பதவிநியமனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ``பப்ளிக் சர்வீஸ் கமிஷன்'' பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி நீதிக்கட்சித் தலைவர் டாக்டர்
நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் சாலை அவரின் சேவையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
நன்றி!--விமலேந்திரா திருஞானசம்பந்தர்



No comments:

Post a Comment